மதுரை கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். உள்ளூர் மக்கள் சுங்கச்சாவடியில் ஆதாரை காண்பித்து கட்டணமின்றி பயணிக்கலாம் என்ற அரசின் வாய்மொழி உத்தரவை ஏற்க மறுத்த அவர்கள், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் கைது செய்ய முயன்றபோது, பலரது சட்டை கிழிந்தது.