அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் 50% பள்ளி மானியம் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த மானிய தொகை, அடுத்த 3 நாள்களில் பள்ளி மேலாண்மை குழுவின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே கை கழுவும் வசதி, பாதுகாப்பான குடிநீர், பள்ளி வளாகத்தில் சோப்பு, கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்கள் கிடைக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.