திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பாரம்பரிய கைத்தறி ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதை வாங்குவதன் மூலம் உள்ளூர் நெசவாளர்களை ஊக்கப்படுத்தலாம் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களில் 1,000க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இத்திட்டம் உள்ளூர் கைவினைஞர்கள், நெசவாளர்களின் வருமானத்தை அதிகரிக்க கொண்டு வரப்பட்டது.