காரைக்குடியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் .அப்போது கூட்டுறவு வங்கிகளில் உருவாகியுள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்தார் . மேலும் தொடர்ந்து பேசுகையில் சுமார் 10,000 பணியிடங்கள் கூட்டுறவுத் துறையில் இதுவரை நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.