ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூலிப்படையை ஏவியவர் குறித்த பின்னணியை விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். வழக்கில் உள்ள முரண்பட்ட தகவல்கள் குறித்த உண்மை நிலையை அறியவே சிபிஐ விசாரணை தேவை என்று பாஜக வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார். முன்னதாக, காவல்நிலையத்தில் சரணடைந்த ஒருவரை என்கவுன்டர் செய்வது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்றும் அவர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது