விக்கிரவாண்டி தொகுதிக்கு நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. நாளை காலை 6 மணிக்கு வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி, 8 மணிக்கு மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திமுக, பாமக, நாதக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.