காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 முதல் மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. மதவாத அரசியலை தடுக்கவும், அன்பை வளர்க்கவும் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன் ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணம் வெற்றியடைந்ததால் தமிழகத்திலும் அதே முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.