அண்ணாமலை படத்துடன் ஆடு வெட்டியதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை தோல்வியைக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரியில் அவரது புகைப்படத்துடன் திமுக பிரமுகர்கள் சாலையில் ஆடு வெட்டினர். இவ்விவகாரத்திற்கு எதிராக பாஜக பிரமுகர் மோகன் தாஸ் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.