கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை தொடர்ந்து, பல அதிகாரிகளை தமிழக அரசு கூண்டோடு மாற்றம் செய்தது. இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாகவே பல அதிகாரிகளை அரசு அதிரடியாக மாற்றம் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.