விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாததால் அக்கட்சி தொண்டர்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என அமைச்சர் பொன்முடி பேசி உள்ளார். திமுக வேட்பாளர்கள் அன்னியூர் சிவாவை ஆதரித்து நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் திமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள் என்றும், அதனை சிதறாமல் பெற வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.