திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடுவதற்காக அண்ணா அறிவாலயம் வந்தார். அப்போது அவருக்கு சர்க்கரையின் அளவு குறைந்து மயக்கம் வந்ததால், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.