பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு முன்னுரிமை அளித்து, மற்ற மாநிலங்களை பாஜக அரசு புறக்கணித்துள்ளதாக எழுந்த விமர்சனங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா பதிலளித்துள்ளார். கடந்த காலத்தைப் போலவே அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கீடுகள் செய்துள்ளதாகக் கூறிய அவர், மாநில மறுசீரமைப்பு சட்டம் 2014-இன்படி, ஆந்திராவின் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு உதவ வேண்டியது கட்டாயமாகும் எனத்
தெரிவித்துள்ளார்.