இசைக் கலைஞர்களுக்கு நடைமுறையில் உள்ள பேருந்து சலுகைகளை தொய்வின்றி வழங்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளிட்டோர் தொழில்முறையாக பயணிக்கும் போது 50% கட்டணச் சலுகை வழங்குமாறும், இசைக் கருவிகளை கட்டணமின்றி அரசுப் பேருந்துகளில் எடுத்துச் செல்லலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. சிவகங்கையில் இசைக்கருவியுடன் பயணிக்க அனுமதி மறுத்தது சர்ச்சையான நிலையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.