இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. புதிய பயிற்சியாளர் தேர்வு இன்னும் நிறைவடையாததால், ஜூலை 6ஆம் தேதி தொடங்கும் ஜிம்பாப்வே தொடருக்கு விவிஎஸ் லக்ஷ்மன் இந்திய அணிக்கு பயிற்சியளிக்கவுள்ளார். தற்காலிக ஏற்பாடாக அவர் ஜிம்பாப்வே செல்வார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். புதிய பயிற்சியாளர் இலங்கை சுற்றுப் பயணத்தின் போது இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.