சென்னை பெரம்பூர் ICF ஆலையில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படுகிறது. இதுவரை 70 ரயில்களை தயாரித்துள்ள ICF, இந்த நிதியாண்டில் 650 ரயில்களை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது 5 வந்தே ரயில்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், தற்போது 16 பெட்டிகள் கொண்ட ரயிலுக்கு இறுதிக்கட்ட பணி நடப்பதாகவும், எதிர்காலத்தில் 24 பெட்டிகளுடன் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.