பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை வழங்க ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. தாய்மார்களின் பயணம் வசதியாக இருக்கும் வகையில் குழந்தைகளுக்கான பேபி பெர்த் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணத்தின் போது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இந்த பெர்த்தில் தூங்க வைக்கலாம். இதை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.