பொதுமக்கள் அசையா சொத்து குறித்த ஆவண பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள விரும்புகின்றனர். இதனால் விடுமுறை நாளான இன்று சனிக்கிழமை ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆவணப்பதிவு மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவண பதிவுக்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது