சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு நடிப்பில் வெளியான ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் 2ஆம் பாகமாக ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், வடிவேலு உடனான பிரச்னையால் அப்படம் பாதியில் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து பேசிய சிம்புதேவன், அப்படத்தை எடுப்பதற்கான சரியான காலகட்டம் இன்னும் அமையவில்லை என்றார்.