சட்டத்தில் பெண்களுக்கு இருக்கும் சலுகைகளை அவர்கள் தவறாக பயன்படுத்துவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி தெரிவித்துள்ளார். பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய ஆண் மீது கீழமை நீதிமன்றம் பலாத்கார வழக்கு பதிவு செய்திருந்தது. அதனை ரத்து செய்த நீதிபதி தண்டபாணி, இருமன சம்மதத்தோடு ஏற்படும் உறவு பலாத்காரத்தில் சேராது என்றும் தீர்ப்பளித்தார்.