ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல் உள்ளுறுப்புகள் காணாமல் போயிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து பேசிய மரியுபோல் பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவர் லாரிசா சலேவா, “உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக ரஷ்யா செயல்படுகிறது. இறந்தவர்கள் மட்டுமல்ல திரும்பி அனுப்பப்படுகிறவர்களும் மோசமான நிலையிலேயே வருகின்றனர்” என வேதனை தெரிவித்துள்ளார்.