புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அங்கு ஊழல் புரிந்திருப்பதாக பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா குற்றம் சாட்டியுள்ளார். அவருடைய எக்ஸ் பதிவில், “அக்கா உங்களை மறந்துவிட்டேன் என்று நினைக்காதீர்கள். கண்டிப்பாக உங்களுக்கான முக்கியத்துவம் பாஜக கொடுக்கவில்லை என்றாலும் என் மனதில் கண்டிப்பாக உண்டு. புதுவை பாஜகவை அழித்தது பத்தாது என்று இப்போது தமிழ்நாட்டு பாஜகவிலும் களம் இறங்கி அழித்துக் கொண்டிருக்கும் உங்களை மறப்பேனா? உங்கள் நீண்ட ஊழல் பட்டியலை பாண்டிச்சேரியில் எடுத்து தொகுப்பதற்கு கொஞ்சம் தாமதம் ஆகிறது. விரைவில் பட்டியலோடு சந்திக்கிறேன். வருத்தம் வேண்டாம் அக்கா” என பதிவிட்டுள்ளார். இதனால் பாஜகவில் பூகம்பம் வெடித்துள்ளது.