ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். பழிவாங்கும் நோக்கத்தாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும் ஹேமந்த் கைது செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், அவருடன் பேசி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகக் கூறினார். மேலும், அரசியலமைப்பை பாதுகாக்கும் உணர்வோடு முன்னேறுபவர்களை உண்மையே பாதுகாக்கிறது என்றார்.