கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 1.50 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வருவதால், தமிழகத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை மாவட்டங்களில் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.