தங்கலான் படத்தின் ஒரு காட்சிக்காக எருமை மாட்டில் சவாரி செய்ததாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். இயக்குநர் காமெடியாக சொன்னதாக முதலில் நினைத்ததாகவும், அப்போது தான் அதற்கு தயாராகவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தனக்கு மேக்கப் போடுவதற்கு மட்டும் 5 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். படத்தில் பழங்குடியினத்தவரின் கடவுளாக மாளவிகா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.