மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாழை’. நிகிலா விமல், பிரியங்கா நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், “ஒரு ஊர்ல ராஜா…” என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. மாரி செல்வராஜ் எழுதியுள்ள இந்த பாடலை, சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். இப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.