ஹைதராபாத் அருகே ஓடும் பேருந்தில் 26 வயது இளம்பெண்ணை 2 ஓட்டுநர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சித்தையா என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான கிருஷ்ணாவை தேடி வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ஹைதராபாத்தில் நடந்த 2ஆவது சம்பவமாகும். முந்தைய சம்பவத்தில், புது வேலை கிடைத்ததற்காக இளம்பெண் பார்ட்டி வைத்தபோது, நண்பர் மற்றும் அவரது உறவினரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.