கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ள சாராயம் குடித்து நான்கு பேர் என்ற ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இபிஎஸ், விடியா திமுக ஆட்சியில் கள்ள சாராயம் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தோம் இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசுக்கு என்னுடைய கடும் கண்டனம்.
கள்ள சாராயம் இல்லை மெத்தனால் என்று சொன்னது போல மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல் கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறோம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.