காவிரியில் இருந்து 1.45 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையோரங்களில் யாரும் செல்ல வேண்டாம், காவிரியில் குளிக்கவோ படகு சவாரி செய்யவோ கூடாது என்று உள்ளூர் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்பி எடுக்கக் கூடாது எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.