கிரிக்கெட் விளையாட்டு வியாபாரமாக மாறிவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி கூறியுள்ளார். ஐபிஎல் போன்ற போட்டிகளில் அதிகப்படியான பணம் கிடைப்பதால், வீரர்கள் அதில் விளையாட ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்த அவர், எனினும் நாட்டுக்காக விளையாட முடியாத பல வீரர்களுக்கு இது ஒரு மாற்று வாய்ப்பாக உள்ளது என்றார். ஐபிஎல், இங்கி., கவுண்டி தொடர்கள் வீரர்களின் பணக்கஷ்டத்தை தீர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்