பல்வேறு துறைகளில் AI தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த வரிசையில், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் கும்பமேளாவில், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு 3,200 ஹெக்டேர் பரப்பரளவில் கும்பமேளம் நடைபெற்ற நிலையில், தற்போது 4,000 ஹெக்டேர் பரப்பளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.