தமிழகத்தில் மண்ணெண்ணெய் வாங்கும் 30 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளில் சமையல் கேஸ் இணைப்பு இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கேஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கே மண்ணெண்ணெய் வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் மண்ணெண்ணெய் வழங்கும் அளவை குறைத்த மத்திய அரசு சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளதாக கூறுவதால் இந்த ஆய்வு நடக்க உள்ளது.