முகமது அசாருதீன் போன்ற மற்ற இந்திய வீரர்களை காட்டிலும் சச்சினைப் பார்த்துதான் மொத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் பயந்தது என முன்னாள் வீரர் பாசித் அலி கூறினார். சச்சின் நன்றாக விளையாடும் போட்டிகளில் இந்தியா எளிதாக வெல்வது வழக்கமாகும் எனக் கூறிய அவர், குறுகிய காலத்திலேயே கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த சச்சின் உலகின் டாப் பவுலர்களை மிகச்சிறப்பாக எதிர்கொண்டதாக புகழாரம் சூட்டினார்.