காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் சோமண்ணாவிடம் பேசியது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சுவாரசிய தகவலை தெரிவித்துள்ளார். சித்தராமையா உங்கள் நண்பர் தானே, நீங்களே நேரில் பேசலாமே என தன்னிடம் சோமண்ணா கேட்டதாகவும், தாயாக இருந்தாலும், பிள்ளையாக இருந்தாலும் வயிறு வேறு தானே என்று தான் கூறியதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.