தண்டவாளங்களை கடக்கும் போது, ரயிலில் அடிபட்டு வனவிலங்குகள், கால்நடைகள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு தீர்வாக, தஞ்சாவூரைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவன் சாம் ஜபர்சன், புதிய தானியங்கி கருவியை உருவாக்கி அசத்தியுள்ளார். இந்த கருவி, அபாய ஒலி எழுப்பி விலங்குகளை விரட்டும் அல்லது தண்ணீரை பீய்ச்சி அடித்து அவற்றை அப்புறப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.