முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஓராண்டுக்கு முன் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்திலா பாலாஜி இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில், அவரது நீதிமன்ற காவலை ஜூலை 18 வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.