பொதுவாக விவசாயிகள் தங்கள் காட்டில் விளையும் பொருள்களை முழுநேரம் பாதுகாக்கவும், திருஷ்டி படாமலும் இருக்க சோளக்காட்டு பொம்மைகளை வைப்பது வழக்கம். ஆனால், கர்நாடகாவில் விவசாயி ஒருவர் இவற்றுக்கு பதிலாக கவர்ச்சி நடிகை சன்னி லியோன், ரச்சிதா ராம் ஆகியோரது படங்களை மாட்டி வைத்துள்ளார். இதனால், திருஷ்டி கழிந்து அமோக விளைச்சல் இருப்பதாகவும், நல்ல லாபம் கிடைத்துள்ளதாகவும் விவசாயி தெரிவித்துள்ளார்.