தமிழ்நாடு நாள் விழாவையொட்டி, 6-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவ.1 தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதால், ஜூலை 18இல் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.