டெட்ரா பேக்கில் (90 மிலி) மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். அரசின் முடிவு சமூகத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், டெட்ரா பேக் மது விற்பனையை அரசு செயல்படுத்த முன்வந்தால் பாமக கடுமையான போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் எச்சரித்துள்ளார். முன்னதாக, டெட்ரா பேக்கில் அரசு மது விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.