காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 100வது கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அதிகாரிகள் கூட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டு கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர். ஆகஸ்ட் மாதத்திற்கான நீர் திறப்பு, அணைகளின் நீர் இருப்பு, நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நிலவரம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும். இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்பார்கள்.