தூத்துக்குடி அருகே முக்காணி பகுதியில் இன்று காலை சாலையின் ஓரம் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் கார் மோதியதில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து, கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் வேகத்தடை அமைக்கப்படாததால் தான் விபத்து ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.