10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு, தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுவதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள எந்த தனியார் பள்ளியும், கல்வி வழங்குவதை சேவையாக செய்வதில்லை என குற்றஞ்சாட்டிய அவர், முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடன் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார்.