தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உள்ள தனுஷ், அடுத்து புதிய படமொன்றை இயக்கி, நடிக்க உள்ளதாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “தனுஷ் பல கதைகளை எழுதி வைத்துள்ளார். ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்திற்கு பின், அவர் எழுதியுள்ள கதை ஒன்றை அவரே இயக்கி நடிக்கவுள்ளார். இளையராஜா பயோப்பிக் முடித்த கையோடு, அவரது 4 ஆவதாக பட வேலைகள் தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.