தமிழகம் முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விலையில்லா சீருடை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு அளவெடுத்து தைக்கப்பட்ட சீருடைகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் சமூக நலத்துறை பணியாளர்களிடம் இணைந்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.