தமிழகத்தில் நாளை (12.07.2024) மற்றும் நாளை மறுநாள் (13.07.2024) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டு நாள்களும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. 14ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.