தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் மதிப்பீடு வகுப்புகள் தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 19, 20 ஆகிய தேதிகளில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில இந்த திட்டம் உதவும்.