2024-25 பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது என்பதை மத்திய அரசு மறந்து விட்டதாகவும், தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், பிரதமர் என்பவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர் என்றும் தெரிவித்துள்ளார்.