தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்கும் வாய்ப்பு சுத்தமாக இல்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரியில் போதுமான நீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும், தமிழகத்திற்கு நீர் திறக்க வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழகத்துக்கு இன்று முதல் ஜூலை 30 தேதி வரை, தினமும் 1 டிஎம்சி திறக்க உத்தரவிடப்பட்டிருந்தது.