போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய இப்புராஹிம், கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இப்புராஹிம் ₹70 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நேற்று சிக்கினார். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியினர் கையில் எடுத்து விமர்சித்த நிலையில், அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவருடன் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது எனவும் தலைமை உத்தரவிட்டுள்ளது.