உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைத்தால் தான் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே திமுக கூட்டணியில் போட்டியிட்டதால் தான் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதாக அவர் கூறியிருந்தார். கூட்டணியை நம்பி இருக்க வேண்டாம் என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறிவரும் நிலையில் திமுக கூட்டணி நிச்சயம் தேவை என ஈவிகேஎஸ் இளங்கோவன் உறுதியாக கூறி வருகிறார்..