திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 12ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த நாள்களில், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.